Monday, January 1, 2018

பழந்தமிழரின் அளவை முறைகள்!

பழந்தமிழரின் அளவை முறைகள்!
நில அளவைகள் பல்வேறு அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன.
  
அது பற்றிய விவரம்

நில அளவை

1 ஹெக்டேர்          - 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர்          – 10,000 சதுர மீட்டர்
1 ஹெக்டேர்          - 100 ஏர்ஸ்
1 ஏக்கர்              – 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர்              – 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர்              – 43,560 சதுர அடிகள்
1 ஏக்கர்              – 100 சென்ட்
1 ஏக்கர்              - 4840 குழி (Square Yard)
1 ஏக்கர்              - 1 லட்சம் ச.லிங்க்ஸ்  
1 ஏக்கர்              - 3.5 மா
1 சென்ட்             – 435.6 சதுர அடிகள்
1 சென்ட்             – 40.5 சதுர மீட்டர்
1 சென்ட்             - 48.4 சதுர குழிகள்
1 சென்ட்             - 1000 ச.லிங்க்ஸ்        
1 கிரவுண்ட்           – 222.96 சதுர மீட்டர்
1 கிரவுண்ட்           – 2400 சதுர அடிகள்
1 மைல்             – 1.61 கிலோ மீட்டர்
1 மைல்              - 1610 மீட்டர்
1 மைல்              – 5280 அடி  
1 மைல்             - 201.16 மீட்டர்
1 மைல்             - 8 பர்லாங்கு
1 சதுர மைல்         - 640 ஏக்கர்
30 சதுர மைல்        – 1 டவுன்சிப்
1 கிலோ மீட்டர்       – 1000 மீட்டர்  
1 கிலோ மீட்டர்       - 0.62 மைல்
1 கிலோ மீட்டர்       – 3280 அடி
1 கிலோ மீட்டர்       – 5 பர்லாங்கு
1 மீட்டர்             – 1.093613 கெஜம்
1 மீட்டர்             – 3.281 அடி
1 சதுர மீட்டர்        – 10.76391 சதுர அடிகள்
1 சதுர மீட்டர்        - 1.190 குழி
1 சதுர அடி           – 0.0929 சதுர மீட்டர்
1 சதுர அடி           - 144 ச.அங்குலம்           
1 ஏர்ஸ்              – 1076 சதுர அடி
1 ஏர்ஸ்               - 2.47 சென்ட்
1 மனை             - 2400 ச.அடி   
1 காணி             - 24 மனை         
1 காணி             - 1 .32 ஏக்கர்
1 காணி              – 132 சென்ட்
1 காணி              - 3 குழி
1 காணி              – 1.32 ஏக்கர்
1 காணி              – 57,499 சதுர அடி
1 குழி               – 44 சென்ட்
1 குழி (Square Yard)    - 0.8361 சதுர மீட்டர் (Square Meter)
1 குழி               - 9 சதுர அடி
1 குழி               - 18 கோல்
1 வேலி             - 6.17 ஏக்கர்
1 வேலி             - 20 மா
1 குந்தா (Guntha)      - 121 குழி = 101.17 சதுர மீட்டர்
1 குந்தா (Guntha)      - 33 அடி  = 1089 சதுர அடி
1 அடி                 – 12 இன்ச்
1 அடி                  - 30.38 செ.மீ
1 பர்லாங்கு          – 660 அடி
1 பர்லாங்கு          - 220 கெஜம்
1 பர்லாங்கு          - 10 செயின்
1 செயின்            – 66 அடி  
1 செயின்            - 100 லிங்க்
1 செயின்            - 22 கெஜம்
1 செயின்            - 66 அடி
1 லிங்க்             – 0.66 அடி
1 கெஜம்             – 3 அடி
1 இன்ச்              – 2.54 செ.மீ
1 செ.மீ               – 0.3937 செ.மீ
1 கெஜம்             – 0.9144 மீட்டர்
1 மா                 - 100 குழி
1 கோல்              - 16 சாண் 
1 பாடகம்            - 240 குழி
1 டிசிமல்             – 1 1/2 சென்ட்

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு             - நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு               - முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம்                 - அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி                 - இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி         - தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி    - இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை              - முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி                 - எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ்              - முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல்   - ஒரு சோடு.
ஐந்து சோடு                 - ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு           - ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு            - ஒரு உரி.
இரண்டு உரி                - ஒரு நாழி.
எட்டு நாழி                 - ஒரு குறுணி.
இரண்டு குறுணி            - ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு             - ஒரு தூணி.
மூன்று தூணி              - ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை   - ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை   - ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை                  - ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை           - ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை                     - ஒரு தோலா.
மூன்று தோலா                       - ஒரு பலம்.
எட்டு பலம்                           - ஒரு சேர்.
நாற்பது பலம்                         - ஒரு வீசை.
ஐம்பது பலம்                         - ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு                        - ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை                - நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை                 - நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா                      - அண்ணளவாக பன்னிரண்டு கிராம்
ஒருதோலா                      - துல்லியமாக 11.7 கிராம்
ஒரு பலம்                      - முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை                      - ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன்                    - நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள்      - ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை            - ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை       - ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை                 - ஒரு நாள்.
ஏழரை நாழிகை                 - ஒரு சாமம்.
ஒரு சாமம்                      - மூன்று மணி.
எட்டு சாமம்                    - ஒரு நாள்.
நான்கு சாமம்                    - ஒரு பொழுது.
ரெண்டு பொழுது                - ஒரு நாள்.
பதினைந்து நாள்                - ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம்                  - ஒரு மாதம்.
ஆறு மாதம்                     - ஒரு அயனம்.
ரெண்டு அயனம்                - ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு                 - ஒரு வட்டம்.

Thursday, July 27, 2017

மனைவி - உன்னில் ஒரு பாதி - உயிரில் ஒரு பாதி - உடலில் ஒரு பாதி

கணவனுக்கும் மனைவிக்கும் சிறிய தகராறு. தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர்.

ஒரு நாள் கணவன் தொழில் விசயமாக அதிகாலை 5மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.
மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை.

அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடிவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான்.

காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7. பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான். ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான்.

மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள். அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள் " மணி 5 ஆகிவிட்டது எழுந்திருங்கள்" என்று!

இந்த கதையில் சுய மரியாதையை காப்பாற்ற வேண்டி சீட்டில் எழுதி வைத்த கணவன், காலை தாமதமாக எழுந்தவுடன் கோபத்தில் சுய மரியாதையை மறந்து ஏன் என்னை எழுப்பி விடவில்லை என்று கேட்கிறார். முதல் நாள் இரவு கொஞ்சம் தனது சுய மரியாதையை மறந்து மனைவியிடம் எழுப்பிவிட சொல்லி இருந்தால் பயணம் தடைபட்டு இருக்காது.

இதே தவறைத்தான் இன்று நம்மில் பலரும் செய்து கொண்டுஇருக்கிறோம். முதலில் சுய மரியாதையை யாரிடம் எங்கே காட்ட வேண்டும் என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மனைவி என்பவள் 
உன்னில் ஒரு பாதி

உன் உயிரில் ஒரு பாதி 
உன் உடலில் ஒரு பாதி

அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோ வை மறக்க பழகுங்கள். இது ஆண்களுக்கு மட்டுமல்ல , பெண்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது இருவருமே தான் .

Wednesday, July 26, 2017

சமையலில் செய்யக்கூடாதவை.

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

#காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.

கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.

பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம்.

அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.

எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.

தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்... மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.

வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.


தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.


தொண்டை கட்டிக்கொண்டால்... கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.


அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.

துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.

கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!

வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!

முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும்.

மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.

எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.

பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.

ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.

குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும்.

கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.

சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.

இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.

No automatic alt text available.

Tuesday, July 25, 2017

செருப்பு

*ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.*

*ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.*

*அப்போது*
*செருப்பு பிஞ்சுபோச்சு..*
*அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.*

*அந்த வீட்டுக்காரரை அழைத்து...*

*ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு.*
*புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்...*

*காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.*

*அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.*

*அதற்கு அந்த வீட்டுக்காரர்* 
*அந்த செல்வந்தரைப் பார்த்து...*

*ஐயா.. " நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க" என்று சொன்னார்.*

*அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்*

*சில ஆண்டுகள் கடந்தன...*

*ஒருநாள் அந்த* *செல்வந்தரே இறந்து போனார்.*

*அவரின் இறுதி ஊர்வலம் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.*

*அப்போது நல்ல மழை.*

*பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...*

*ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.*

*அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு, பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.*

*அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..*

*ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? "மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க" என்று..*

*அவ்வளவுதாங்க வாழ்க்கை..*

*ஒரு செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது*

*வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...*

*(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை)*

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட சொற்பமான வாழ்நாட்களில் தாய் தந்தையர் ...மகளிடமோ மகனிடமோ பேசாமல் இருப்பது 
உற்றார் உறவினர் பேசாமல் இருப்பது இப்படி கொடுமையான தண்டனைகளை கொடுத்து என்ன சாதிக்க போகிறோம்...இருக்கும் வரை ஒருவர் மனதில் ஒருவர் அன்பை விதைத்திடுங்கள்..செய்த தவறுகளுக்கு மனவருத்தமும் தண்டனைகளும் அனுபவித்த பிறகும் மன்னியுங்கள் என்ற வார்த்தையை மனமுறுகி கேட்கும் கேட்கும் போது மன்னிப்பபவர்கள் இறைவனின் சாயலாக மற்றவர்க்கு தெரிவோம் என்ற உண்மையை மட்டும் மறக்க வேண்டாம் ..போகும் போது நாம் எதையும் எடுத்து செல்லப்போவதில்லை ..அன்போடு நாம் பழகிய உள்ளங்கள் மட்டுமே நம் சவத்திற்கு பின்னால் வரக்கூடும்..பிணத்தை சுமக்க நான்கு தோள்களும்....பின்னால் வர அன்பான உள்ளங்களை பெற்ற யாவரும்..வரமே..

Sunday, July 23, 2017

அழுகை

ஆறுதலே கூற முடியாத
சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை
ஒரு மருந்தாக இருக்கும்....


நாளை என்பதே நமக்கு
உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை 



பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா
 எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.



இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது ஆனாலும், "எப்படி பேச வேண்டும்" என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!





நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...


நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....



நம்மில் பெரும்பாலானோர்,
சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....




வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை



இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ....
அதற்கும் ...
"ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .



அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?



சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.



கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!



வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.



வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...



மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்
...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...



எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....



இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ....
ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...




பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.




தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!




# சிரித்துக்_கொண்டே
# உன்னோடிருந்து
# உனை_சீரழிக்கும்
# துரோகியை_விட ...
# முறைத்துக்_கொண்டே -
# உன்
# முன்னிருக்கும்
# எதிரி_மேலானவன் !.....


அவ்வளவு
எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட
இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில்
கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது



உனக்காக... தன் மீதான
நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும்
பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..



அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல்
நடுவில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும் வாழ்வை அனுபவிக்க.........




நூறு பேரின் வாயை
மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை
மூடிக்கொள்வது
சிறந்தது......



வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..





# புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
# மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
# எல்லா "பிரச்சினைகளுக்
கும் இந்த வாய் காரணம்..!!!



அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க
முடியாது.....



வாழ்வோடு போராடிச்
சாவதிலும்
சாவோடு போராடி
வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!



இனிய வணக்கங்கள்.

உணவு

சிறப்பான உணவு  வகைகள் - தமிழ்நாடு ..

1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை

2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா

3. சிதம்பரம் கொத்சு

4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்

5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை

6. கும்பகோணம் பூரி-பாஸந்தி

7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்

8. மன்னார்குடி அல்வா

9. கூத்தாநல்லூர் தம்ரூட்

10. நீடாமங்கலம் பால்திரட்டு

11. திருவையாறு அசோகா

12. கும்பகோணம் டிகிரி காபி

13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா

14. கோவில்பட்டி கடலை மிட்டாய்

15. ஆம்பூர் தம் பிரியாணி

16. நாகர்கோவில் அடை அவியல்

17. சாத்தூர் சீவல்

18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா

19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்

21. மணப்பாறை அரிசி முறுக்கு

22. கீழக்கரை ரொதல்அல்வா

23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி

24. பண்ருட்டி முந்திரி சாம்பார்

25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்

26. சாயல்குடி கருப்பட்டி காபி

27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா

28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்

29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி

30. புதுக்கோட்டை முட்டை மாஸ்

31. தூத்துக்குடி மக்ரூன்

32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி

33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு

34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்

35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்

36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம 'செட்டி நாட்டுலே' மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும் அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..

1. குழிப்பணியாரம்

2. வாழைப்பழ தோசை

3. எண்ணெய் கத்தரிக்காய்

4. பால் பணியாரம்

5. பூண்டு வெங்காய குழம்பு

6. ரவா பணியாரம்

7. பால் கொழுக்கட்டை

8. சேமியா கேசரி

9. மோர் குழம்பு

10. நாட்டுகோழி மிளகு வறுவல்

11. இறால் தொக்கு

12. நட்டுக் கோழி ரசம்

13. நண்டு மசாலா

14. வெண்டைக்காய் புளிக்கறி

15. பருப்பு சூப்

16. ரிப்பன் பக்கோடா

17. பருப்பு உருண்டை குழம்பு

18. குருமா குழம்பு

19. தேன்குழல்

20. கருப்பட்டி பணியாரம்

21. சீயம்

22. மாவுருண்டை

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.

"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்"

Tuesday, July 18, 2017

சிரிக்க மட்டும்

ஒரு பெண் டிரைவிங் லைசென்ஸ் வாங்க RTO விடம் சென்றார். RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.

இரண்டாம் முறை சென்ற போதும் RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.

மூன்றாம் முறை சென்றார் அப்போதும் RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.

நான்காவது முறையும் RTO கேட்ட கேள்விக்கு அந்தப் பெண் சொன்ன பதில் திருப்தியாயில்லை. RTO லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.

அந்தபெண்ணுக்கு இந்தத்தடவை கடுமையான கோபம் வந்து விட்டது. RTO வைப் பார்த்துக் கேட்டார், நீங்கள் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள். நான் சொன்ன நாலு பதில்களையும் தவறென்று சொன்னால் நான் என்ன செய்ய முடியும்?

அப்படி அந்த RTO என்ன தான் கேட்டார் அந்தப் பெண் என்ன பதில் சொன்னார். நீங்களே சொல்லுங்கள் நியாயம்

RTO கேட்டார் : "அம்மா நீங்கள் ஹைவேயில் 125 கி மீ வேகத்தில் உங்கள் காரை ஒட்டிக்கொண்டு போகிறீர்கள். திடீரென்று உங்கள் முன்னா்ல் ஒரு கிழவனும் ஒரு இளைஞனும் வேறு வேறு திசையிலிருந்து முன்னால் வந்து விட்டார்கள். வலது பக்கம் பாறை இடது பக்கம் 6 அடி ஆழமான பள்ளம். நீங்கள் என்ன செய்வீர்கள்?"

அந்தபெண் முதல் தடவை சொன்னார் :
பள்ளத்தில் இறக்குவேன் என்று.

இரண்டாவது தடவை சொன்னார் கிழவர் மேல் ஏற்றுவேன் என்று.

மூன்றாவது தடவை சொன்னார் இளைஞன் மேல் ஏற்றுவேன் என்று.

நான்காவது தடவை சொன்னார் பாறை மேல் ஏற்றுவேன் என்று.

RTO கடைசியாகக் கேட்டார் ஏம்மா ஒரு தடவை கூட நான் ப்ரேக் போடுவேன்னு சொல்ல மாட்டீங்களாம்மா?

இப்பிடிப் பண்றீங்களேம்மா?

நான் எப்படிம்மா உங்களுக்கு லைசென்ஸ் தர்றது?

நியாயம்தானே..!!!