Wednesday, June 28, 2017

தமிழ் பொண்ணுங்க

- சிரிச்சாலும் அழகு

- முறைச்சாலும் அழகு

- அன்பா பேசினாலும் அழகு

- அருவா தூக்கினாலும் அழகு

- நாற்று நடுவினாலும் அழகு

- கோலம் போட்டாலும் அழகு

- கோவிலில் சாமி கும்பிடுவதும் அழகு

- கோழி, சேவல்களை கொஞ்சுவதும் அழகு

- தாவணி அணிந்து நடப்பதும் அழகு

- தூரம் சென்று திரும்பி பார்ப்பதும் அழகு

- சமையல் செய்வதும் அழகு, அதை குழந்தைக்கு ஊட்டிவிடுவது அதைவிட அழகு.

- பாம்பை கையால் பிடிப்பது அழகு 
- கரப்பான்பூச்சிக்கு பயப்படுவதும் அழகு.

- மண்ணை பார்த்து நடப்பதும் அழகு

- விண்ணை தொட செய்யும் விடாமுயற்சியும் அழகு

-வெட்கத்தில் சிவக்கும் கன்னங்களும் அழகு.

- கன்னங்களில் விழும் முடியை கோதுவதும் அழகு

- இரவின் குளிர் போல் கருப்பு நிற தேகமும் அழகு

- வேலை செய்யும்பொழுது வரும் வியர்வை துளியும் அழகு

- பேருந்து படிகளில் பயணிப்பதும் அழகு

- சீண்டும் ஆண்களை அடிப்பதும் அழகு

- மனதுக்கு பிடித்தவனை ரசிப்பதும் அழகு

- காதல் வந்ததும் சிணுங்குவதும் அழகு.

- கல்யாணம் முடிந்ததும் பெற்றோரை பிரிகையில் வரும் கண்ணீர் கூட அழகு

ஒட்டுமொத்தத்தில் எங்க தமிழ் பொன்னுங்க அன்பையும் வீரத்தையும் காட்டுற கெத்தே தனிதான்...

No comments:

Post a Comment